பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாஜகவினர் மனிதச்சங்கிலி போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மற்றும் அமைப்பு சாரா அணி சார்பாக, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க கோரி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-30 12:00 GMT

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 

மத்திய அரசு, சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில், தமிழ்நாடு அரசும் விலையை குறைக்க வேண்டுமெனக் கோரி, தமிழ்நாடு பாஜகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாஜக ஒபிசி மற்றும் அமைப்பு சாரா அணி  சார்பில், இன்று காஞ்சிபுரம் தேரடி அருகே, மாவட்ட செயலாளர் பாபு தலைமையில், மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகோர்த்து மார்க்கெட் பகுதி வரை நின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  தமிழ்நாடு அரசை கண்டித்தும், உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகவும், பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News