காஞ்சிபுரம் அருகே முன் விரோதம் காரணமாக மளிகை கடைக்காரர் வெட்டிப் படுகொலை

Murder In Tamil- காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் மளிகை கடை நடத்திவருக்கும் பக்கத்து கடை வாலிபருக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை நிலவி வந்துள்ளது.

Update: 2022-08-09 03:00 GMT

படுகொலை செய்யப்பட்ட சிவஞானம் நடத்தி வந்த மளிகை கடை மற்றும் அதன் அருகில் கொலை செய்த சரவணன் நடத்தி வந்த துரித உணவகம்.

Murder In Tamil- காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் ஊராட்சியில் வசித்து வரும் எ.சிவஞானம் (56) சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இதே கிராமத்தை சேர்ந்த மண்டபத் தெருவில் வசிக்கும் சரவணன் (32) என்பவர் இவரது மளிகை கடைக்கு பக்கத்தில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே இடம் தொடர்பான பிரச்சனை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிவஞானத்தை சரவணன் மற்றும் அவரது நண்பரான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (23), ஆபேல்( 24) ஆகியோர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திலிருந்த அவரது உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து இது குறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இதுபோன்று சம்பவம் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News