ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை (செப்.29) ஆட்கள் தேர்வு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Update: 2023-09-28 04:30 GMT

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு நாளை (செப்.29) வெள்ளிக்கிழமை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டி.பி.ஹாலில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக பி.எஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி அல்லது உயிர் அறிவியல் பட்டப் படிப்புகளான பி.எஸ்சி விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி, பிளாண்ட் பயாலஜி ஆகியவை படித்திருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் மாத ஊதியமாக ரூ 15,435 ரூபாய் வழங்கப்படும். தேர்வு முறையாக எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, நேர்முகத்தேர்வு பின்பற்றப்படும். நேர்முகத் தேர்வன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதேபோல், ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறையாக எழுத்துத்தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடத்தப்படும். மாத ஊதியம் ரூ.15,235 வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய 7397724813, 7397724829, 9154251540,7397724832 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக அவசியம் கொண்டு வரவேண்டும். இத்தகவலை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News