நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டியில் மின் உற்பத்தி நிறுத்தம்

Shutdown Today - நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில் ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-08-09 06:15 GMT

நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில் ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Shutdown Today - ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மற்றும் கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில், தினமும் 15 மெகா வாட் மின் உற்பத்தியாகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து, உபரி நீர் அதிகமாக வருவதால், இரு கதவணைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி 1.45 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், மேலும் ஒரு வாரம், மின் உற்பத்தி துவங்குவது கடினமாக இருக்கும். காவிரி ஆற்று உபரி நீரின் அளவு, 35 ஆயிரம் கன அடிக்கு குறைந்தால் மட்டுமே, மின் உற்பத்தி துவங்க வாய்ப்புள்ளது என, நீர் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News