ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.49 மோசடி: இளம்பெண் கைது

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.49 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-02-13 09:30 GMT

கைது செய்யப்பட்ட மாரியம்மாள்.

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.49 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 46). நிதி நிறுவனமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இதன் பங்குதாரராக அழகர்சாமியின் மகள் மாரியம்மாள் என்கிற கனகா ஸ்ரீ (வயது 26) இருந்து வந்தார்.

அழகர்சாமியிடம் கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்த பாலு (வயது 48) ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். ஏலச்சீட்டு நிறைவடைந்தும் அவருக்கு அழகர்சாமி பணம் கொடுக்கவில்லை.

இதற்கிடையில், பாலு மீண்டும் அழகர்சாமியிடம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். தொடர்ந்து பாலு பணம் கேட்டதால் தந்தையும், மகளும் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கான 2 காசோலைகளை வழங்கியுள்ளனர்.

வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலு இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அழகர்சாமி மற்றும் மாரியம்மாள் இருவரும் அங்கீகாரம் இல்லாத ஏலச்சீட்டு நடத்தி பாலுவிடம் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 500 மோசடி செய்தது தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியம்மாளை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அழகர்சாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News