கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென சேலம் மண்டல வீட்டுவசதி துணைப்பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-09 06:00 GMT

பைல் படம்.

சேலம் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென சேலம் மண்டல வீட்டுவசதி துணைப்பதிவாளர் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மண்டல வீட்டுவசதி துணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் சேலம், நாமக்கல், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள சங்க உறுப்பினர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை தொடர்புடைய வீட்டுவசதி சங்கத்தின் அலுவலர்களை அணுகி வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News