கொடிவேரி அணையில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், இன்று (அக்டோபர் 15) ஞாயிற்றுக்கிழமை அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-15 04:45 GMT

கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், இன்று (அக்டோபர் 15) ஞாயிற்றுக்கிழமை அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கொடிவேரி அணை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (நேற்று) இரவு 145.5 மி.மீ மழை மழை கொட்டி தீர்த்தது. இதனால் கொடிவேரி அணை வழியாக 1,120 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக் கட்டுக்கு பகுதிக்கு வருவதற்கும், குளிப்பதற்கும் பொதுப்பணித் துறையினா் தடை விதித்துள்ளனா்.

இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்தது. இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News