அந்தியூர் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-21 02:45 GMT

Erode news, Erode news today- தற்கொலை செய்துகொண்ட வாலிபர் கேசவமூர்த்தி (கோப்பு படம்)

Erode news, Erode news today- அந்தியூர் அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சரசு. இவர்களுடைய மகன் கேசவமூர்த்தி (வயது 28). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் ஹாஸ்டல் அட்டென்டராக பணிபுரிந்தார்.

இவருக்கும் திருப்பூர் மாவட்டம், முத்தூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, ஈரோடு லக்காபுரத்தில் உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) காலை திருமணமும் நடக்க இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை, ஆலாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கேசவமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News