ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update: 2025-02-01 12:00 GMT

நாமக்கல் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அத்தொகுதிக்கு உள்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய ஏதுவாக நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

விடுமுறை அளிக்க வேண்டிய நிறுவனங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் பிப்ரவரி 5-ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார்

விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகார்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள

மேலும் விவரங்களுக்கு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி (94453-98751), தொழிலாளர் துணை ஆய்வாளர் இரண்டாம் சரகம் ஆர்.எஸ்.மயில்வாகனன் (98404-56912), தொழிலாளர் உதவி ஆய்வாளர் இரண்டாம் சரகம் பெரோஸ் அகமது (99656-34839) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் 0424-2270090 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News