அந்தியூர் அரசு கல்லூரி: 95 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு

புதியதாக துவங்கப்பட்டுள்ள அந்தியூர் அரசு கல்லூரியில் 95 இடங்கள் காலியாக உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-20 10:30 GMT

பைல் படம்

இதுகுறித்து அந்தியூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளதாவது:-  புதிதாக தொடங்கப்பட்ட அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. பாரதியார் பல்கலைக்கழக அறிவுறுத்தலின் படி, மாணவர் சேர்க்கை வருகின்ற 26ம் தேதி முடிவடைகிறது. பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி கணி தம் ஆகிய பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 300 இடங்களில் 200க்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 95 இடங்கள் காலியாக உள்ளதால் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கல்லூரி அலுவலகத்தை அனுகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News