தர்மபுரி: மாணவர்களை அடித்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

தர்மபுரியில், மாணவரை அடித்த புகாரில், அரசு பள்ளி ஆசிரியரை சி.இ.ஓ சஸ்பெண்ட் செய்தார்.

Update: 2021-12-15 09:45 GMT

தர்மபுரி அடுத்த அவ்வை நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார்,வயது 40. மாணவர்களை சரியாக படிக்கவில்லை என அடித்துள்ளார். கண்டித்துள்ளார்; அத்துடன் மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து,  பெற்றோர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சதீஷ்குமாரை,  தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, சி.இ.ஓ.  உத்தரவிட்டார்.

Tags:    

Similar News