தருமபுரி: ரேஷன் கடையில் பா.ம.க. எம்எல்ஏ ஆய்வு!

நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடையில், தருமபுரி பா.ம.க. எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-09 11:05 GMT

நல்லம்பள்ளி அருகே உள்ள பூரிகள் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில்  ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சில ரேஷன் கடைகளில்,  அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றதாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல், நல்லம்பள்ளி அருகே உள்ள பூரிகள் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், அரிசி தரமற்றதாக வழங்கப்படுவதாக, தொடர்ந்து பொதுமக்கள் எம்.எல்.ஏ-வுக்கு புகார் அளித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இன்று பூரிகள் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு மேற்கொண்டார். இதில், அரிசி தரமற்றதாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட வட்டவழங்கல் அலுவலரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, அரிசியை உடனடியாக மாற்றி தரும்படி கேட்டார். அவரது கோரிக்கையை தொடர்ந்து, நல்ல அரிசி உடனடியாக ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  எம்.எல்.ஏ. நேரில் சென்று ரேஷன் கடையில் ஆய்வு செய்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News