தர்மபுரியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

தர்மபுரியை சேர்ந்த காதல் ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2021-08-25 09:45 GMT

தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ள காதல் ஜோடி பன்னீர்செல்வம்- மகா.

தர்மபுரி அருகே உள்ள புழுதிகரை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகா(19). இவர் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் உடன் படிக்கும் பன்னீர்செல்வம்(21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மகாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த மகா காதலித்த பன்னீர்செல்வத்தை கடந்த 20-ந் தேதி கொல்லாபுரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி இன்று தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து  போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News