காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
தர்மபுரியில் காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணியானது, ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்.