கோவை திருச்சி சாலை மேம்பாலத்தின் சுவரில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Trichy Road Flyover-கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுவரில் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

Update: 2022-07-15 04:28 GMT

விபத்து நடந்த பாலத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Trichy Road Flyover-கோவை  ஒப்பணக்கார வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயது நிரம்பிய ஆனந்தகுமார், ஒண்டிபுதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல பணிக்கு ஒன்டிபுதூர் நோக்கி அவர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது சுங்கம் பகுதியை அடைந்தபோது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி 40 அடி உயரத்திலிருந்து வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் நிகழ்வு இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதேபோல் பாலத்தின் மீதிருந்து கடந்த மாதம் முன்பு கீழே விழுந்த ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட அடுத்தநாளே இளைஞர் ஒருவர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாலம் திறக்கப்பட்ட 2 மாதத்திற்குள் 3 உயிரிழப்புகள் நிகழ்ந்து விட்ட நிலையில் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர்களை சற்று உயரமாக அமைக்க வேண்டும் அல்லது கோவை 100 அடி சாலையை இணைக்கும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது போல் கம்பி வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News