அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக விவசாய அணி முடிவு

அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.

Update: 2022-08-12 05:40 GMT

அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவையில்,  பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

மூன்றாண்டுகளுக்கு முன், 1,856 கோடி ரூபாயில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள், தற்போது கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் கோவையில் உள்ள 2,000 குளம் குட்டைகள் பயன் பெறும். இதில் இன்னும் 800 குட்டைகளை இணைக்கப்பட உள்ளது. கொரொனா காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்ட பணிகளை மேற்கொண்டார். இத்திட்டம் 2021 ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய திட்டம். ஆனால் திமுக அரசு பதவியேற்ற பின், 2.2 கிமீ க்கு பைப் போடாததால், 17 மாதங்களாக இத்திட்டம் கிடப்பில் கிடப்பில் உள்ளது. திட்டமிட்டபடி, கடந்தாண்டில் பணி முடித்திருந்தால்,  பல்வேறு பயன்கள் கிடைத்திருக்கும்.

அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து அத்திக்கடவு அவிநாசி திட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், 1,000 வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். அதற்குள் இத்திட்ட பணிகளை முழுமையாக, அரசு முடிக்க வேண்டும், என்றார். 

Similar News