சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வரும் இளைஞர்கள்

Update: 2021-05-14 09:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுத்தில் பணிபுரிந்துவரும் அஜய், சந்துரு ஆகிய இரு இளைஞர்கள், சாலையோரத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறனர்.

கொரோனா தாக்கம் காரணமாக சிங்கப்பெருமாள்கோயிலில் தனது வீட்டிலிருந்து பணியாற்றி வரும் அஜய், சந்துரு ஆகிய இருவர்களுக்கு தனது நண்பர்கள் வழங்கும் நன்கொடை ஆகியவற்றை கொண்டு சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறனர்.

வீட்டிலிருந்து தனது அலுவலக பணிகளை கவனித்து வரும் இரு இளைஞர்களும், காலை, மதியம், மாலை, என அனைத்து நாட்களில் தனது நண்பர்களுடன் இணைந்து இத்தகைய சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று தற்பொழுது வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் சாலையோரவாசிகளுக்கு உணவு மட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை அஜய், சந்துரு ஆகியோர் வழங்கி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பிறர் பசி போக்க சேவையாற்றிவரும் இரு இளைஞர்களுக்கும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News