எஸ்ஆர்எம் மருத்துவமனை-பார்கின்சன்ஸ் ரிசர்ச் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்ஆர்எம் மருத்துவமனை-பார்கின்சன்ஸ் ரிசர்ச் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Update: 2024-02-15 11:36 GMT

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் பார்கின்சன்ஸ் ரிசர்ச் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தெலுங்கானாவின் கோண்டாப்பூரில் உள்ள பார்கின்சன்ஸ் ரிசர்ச் அலையன்ஸ் ஆஃப் இந்தியா (PRAI) இணைந்து பணியாற்றுவதற்கும், குறிப்பாக நரம்பு இயக்கக் கோளாறுகள் கூட்டு ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, மாணவர் பயிற்சி, ஆசிரியர் பரிமாற்றம், கருவிகள், தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கல்வித் திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும்.

வளர்ச்சியைப் பற்றி டாக்டர் சத்தியநாராயணன் பேசியதாவது:-

உலகத் தரம் வாய்ந்த சிறப்பைக் கொண்டுவருவதற்கும், சுகாதாரப் பாதுகாப்பின் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும் எங்களின் முயற்சிகளின் ஒரு பகுதிதான் புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கம் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகும்.

அல்சைமர் நோய் மற்றும் பார்கின்சன் நோய் ஆகியவை அமெரிக்காவில் 1.5 மில்லியன் மக்களை பாதிக்கும் முதல் இரண்டு நியூரோ டிஜெனரேட்டிவ் நோய்களாகும், மேலும் இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த சிக்கலான உடல்நலப் பிரச்சினைக்கு தீர்வு காண தனது பலத்தை அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாக்டர்  சத்தியநாராயணன் முன்னிலையில், எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை துணை வேந்தர் டாக்டர் லெப்டினெண்ட் கர்னல் ஏ.ரவிக்குமார், மற்றும் இந்திய பார்கின்சன் ஆராய்ச்சி கூட்டணியின் (PRAI) இயக்குனர் பேராசிரியர் ரூபம் போர்கோஹைன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஹிப்போகிரேட்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில், இந்தியப் பேராசிரியர்களுடன் இங்கிலாந்து, போலந்து, ருமேனியா, இத்தாலி, துபாய் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் இரண்டு புதிய சிகிச்சை முறைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து பார்கின்சன் நோயில் பயோமார்க்ஸ், டோபமைனின் பேட்ச் மற்றும் உட்செலுத்துதல் சிகிச்சைகள் மற்றும் இயக்கக் கோளாறுகளுக்கான அணுகுமுறை, புதிய மருந்து உருவாக்கம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் ஊக்கமளிக்கும் அமர்வுகள் நடைபெற்றன.

Tags:    

Similar News