சாலையில் பற்றி எரிந்த கார்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில், சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பில்லை.

Update: 2021-12-14 04:15 GMT

தீயில் எரிந்து சேதமான கார். 

திரு நெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி,  ராகவேந்திரன்(46) என்பவர், துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக,  இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக அவரது கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராகவேந்திரன், காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கிய அடுத்த நொடியே மளமளவென மிகப்பெரிய அளவில் கார் தீபற்றி எரிய ஆரம்பித்து விட்டது.இத னை கண்ட அருகில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடையில் உள்ள தீயணைப்பான் கருவிகளி கொண்டு தீயை கட்டுப்படுத்த முற்பட்டனர்.

எனினும் தீயை கட்டுப்படுத்த முடியாததால்,  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிஷ்டவசமாக இதில் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News