/* */

தண்ணீர் லாரி - வேன் மோதல்: 4பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தூத்துக்குடி அருகே இன்று காலை நடந்த வாகன விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்

HIGHLIGHTS

தண்ணீர் லாரி - வேன் மோதல்: 4பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
X

தண்ணீர் லாரி மோதியதில் நொறுங்கிய வேன்

தூத்துக்குடி அருகே இன்று காலை புதியம்புத்தூர் பகுதியிலிருந்து ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேன், சில்லாநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி வேன் மீது மோதியதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வேனில் வந்த செல்வராணி, காமாட்சி, சந்தான லட்சுமி, ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் மணிமேகலை என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேன் மோதிய வேகத்தில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ரூரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கிராமத்தை சேர்ந்த பெண்கள் வேலைக்கு சென்ற வழியில் விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Sep 2021 5:16 AM GMT

Related News