/* */

செங்கோட்டை வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை

2015ம் ஆண்டு செங்கோட்டையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

HIGHLIGHTS

செங்கோட்டை வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை
X

2015ம் ஆண்டு செங்கோட்டையில் நடைபெற்ற வாலிபர் கொலை வழக்கில் தந்தை - மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு.

2015ம் ஆண்டு செங்கோட்டையில் நடைபெற்ற வாலிபர் கொலை வழக்கில் தந்தை - மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 9.1.2015ம் ஆண்டு வாலிபர் முருகேஷ்குமார் வயது 24 என்பவரை கொலை செய்ததது தொடர்பான வழக்கு தென்காசி கூடுதல் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து. செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ்குமார் கூலித் தொழிலாளியான இவர் நண்பர் ரூபன் என்பவர் மீது செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் முன்விரோதத்தில் தாக்கியுள்ளார். இதனை முகேஷ்குமார் மணிகண்டனிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது சகோதரர் மாரியப்பன் இவர்களின் தந்தை திருமலையாண்டி ஆகிய மூவரும் முருகேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்தில் முகேஷ்குமார் இறந்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்று தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது கொலை வழக்கில் தொடர்புடைய தந்தை திருமலையாண்டி மகன்கள் மாரியப்பன், மணிகண்டன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தந்தை மற்றும் மகன்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 22 Oct 2021 5:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  2. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  3. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  4. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  5. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  7. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  8. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  9. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  10. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!