/* */

வடகிழக்கு பருவமழை: குற்றாலத்தில் தீயணைப்புத்துறை பாதுகாப்பு ஒத்திகை

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குற்றாலத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை: குற்றாலத்தில் தீயணைப்புத்துறை பாதுகாப்பு ஒத்திகை
X

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தென்காசி தீயணைப்புத் துறை சார்பில் குற்றாலத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தொடர்பாக தென்காசி தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் குற்றாலத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு மீட்புப் பணிகள் சார்பில் குற்றாலம் படகு குளத்தில் வைத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மற்றும் படகு விபத்துக்குள்ளானவர்களை மீட்பது குறித்தும் வெள்ள அபாயத்தின் போது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தற்காத்துக் கொள்வது மற்றும் வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்டு முதலுதவி அளிப்பது தொடர்பான செயல் முறை விளக்கம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் செய்து காட்டினர்.

மேலும் வாகன விபத்து தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து தென்காசி தனியார் கல்லூரி மருத்துவ குழுவினர் செய்து காட்டினர் இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையின் சிறப்பு உபகரணங்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.

Updated On: 15 Sep 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  5. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  6. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  9. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  10. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!