Begin typing your search above and press return to search.
இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
இந்திராகாந்தியின் 104வது பிறந்த நாள் விழா முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசியில் இந்திராகாந்தியின் 104வது பிறந்த நாள் விழா முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இன்று நாடு முழுவதும் இந்திரா காந்தியின் 104 ஆவது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆசாத் நகர் பகுதியில் உள்ள இந்திரா காந்தி திருவுருவச் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி ஒன்றிய குழு துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், நகரத் தலைவர் காதர் மைதீன், வட்டார தலைவர் பெருமாள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.