Begin typing your search above and press return to search.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- தென்காசி கலெக்டர்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தென்காசி கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்; - 2021 வாக்குப்பதிவு தினம் 06.04.2021-ஐ முன்னிட்டு -ஏப்ரல் 4,5,6 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2 ஆகிய தினங்களில் மட்டும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மேற்படி தினத்தில் மூடப்படும் மற்றும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என தெரிவித்தார்.