/* */

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி மஞ்சள் நீராட்டு விழா

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி மஞ்சள் நீராட்டு விழா
X

செண்பகாதேவி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய மூலிகைகளையும் பல்நோக்கு உயிர் காடுகளையும் கொண்டுள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலை மருத்துவத்திற்கு மட்டுமல்லாமல் ஆன்மிகத்திற்கும் சிறந்து விளங்கும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இங்கு குற்றாலம், பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவி என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று கோவிலில் செண்பகாதேவி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு செண்பகாதேவி அருவியில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அருவியில் மஞ்சள் மற்றும் பூஜைப் பொருட்கள் தெளித்து தீர்த்தவாரி நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ பரவல் காரணமாக வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. வனத்துறை |கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி அடர் வனப்பகுதியில் அமைந்திருப்பதால் , வனத்துறை சார்பில் நீர்நிலைகளில், தடாகங்களில் இறங்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. வன விலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன் பின்னரே பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வனப்பகுதியில் நெகிழி பொருட்களை வனப்பகுதிக்குள் கொட்டாமல் இருக்க கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.

Updated On: 18 April 2022 10:17 AM GMT

Related News