/* */

தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவம்: 2 பேர் கைது

தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவம்: 2 பேர் கைது
X

நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்திற்குட்பட்ட மலையான் தெருவில் வசித்து வருபவர் முப்புடாதி. இவர் கடந்த 15ம் தேதி கடைக்கு சென்ற போது பீரோவை உடைத்து சுமார் 24 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை யாரோ திருடி விட்டதாக கொடுத்த புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில், தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பகராஜா, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், காவலர் செளந்தர், பராக்கிரம பாண்டி தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மலையான் தெருவை சார்ந்த முத்துமாலை என்பவரது மகன் பால செல்வகணேஷ் 17, மற்றும் களக்கோடி தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் விவேக் 24 ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,20000 ம் மதிப்புள்ள தங்க செயின் மீட்கப்பட்டது.

Updated On: 23 April 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?