Begin typing your search above and press return to search.
தலைமைக் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த நபர் கைது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு மகாமேடு பகுதியில் சார்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தலைமை காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அங்கு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகவேல் சேர்வை என்பவரின் மகன் கந்தசாமி என்ற நபரை கைது செய்ய முயற்சித்த போது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேற்படி நபர் மீது சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.