/* */

தப்பி ஓடிய கைதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

சேலம் அருகே காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய நபரை தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தப்பி ஓடிய கைதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
X

சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற நபரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். மற்றொரு வழக்கு விசாரணைக்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் நாமக்கல் சிறைச்சாலைக்கு திரும்பும்போது சக்ரவர்த்தி காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தப்பி ஓடிய சக்கரவர்த்தியை தனிப்படை போலீசார் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து சேலம் அழைத்து வரப்பட்ட சக்கரவர்த்தியை சிறையில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சக்ரவர்த்தி தப்பி ஓடும்போது தாக்கியதில் ராசிபுரம் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் காயமடைந்தார்.

Updated On: 26 Jan 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...