/* */

பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் பலி

வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருந்த இன்ஜினியரிங் மாணவர் நீரில் மூழ்கி பலியானார்

HIGHLIGHTS

பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் பலி
X

பாலாறு அணைக்கட்டில் மூழ்கி பலியான மாணவர் ஹரிஹரன்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பாலாறு அணைக்கட்டு உள்ளது .

அதில் கடந்த மாத முதல் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து தொடங்கி அணைக்கட்டு நிரப்பி வருகிறது. ஆற்றிலிருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு செல்ல கால்வாய் மூலம் நீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

கால்வாயில் வாலாஜா அடுத்த அல்லிகுளத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(21) சென்னை பொறியியல் கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்த அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதத்தில் நீரில்மூழ்கினார். உடனே தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஹரிஹரனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 Oct 2021 6:52 AM GMT

Related News