Begin typing your search above and press return to search.
மீனவர்கள் விடுவிக்கவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்
மீனவர்கள் உடனே விடுவிக்கவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்-இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு
HIGHLIGHTS
இராமேஸ்வரம், நாகை, காரைக்கால் போன்ற பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 54 மீனவர்களையும் 5 படகை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடித்து, கிளிநொச்சி, காங்கேசன்துறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் உள்ள கடற்படை முகாமில் தனிமை படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று இன்று நடைபெற்ற மீனவ சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்தனர். அதன்பின் 54 மீனவர்களையும் 5 படகையும் மத்திய மாநில அரசுகள் விரைவாக மீட்டுத் தர வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் தெரிவித்தனர்.