/* */

இராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தது இலங்கை கடற்படை

இலங்கை கடற்படை விடுவித்த 20 மீனவர்கள் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.விடுதலை செய்ய உதவிய அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தது இலங்கை கடற்படை
X

இலங்கை கடற்படை விடுவித்த 20 மீனவர்கள் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர் உறவினர்கள் சக மீனவர்கள் வரவேற்றனர். விடுதலை செய்ய உதவிய மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற இரண்டு படகுகளையும் அதிலிருந்த 20 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து அவர்களை இரணைதீவு பகுதியில் தனிமை பிடித்து வைத்தனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசின் அழுத்தம் காரணமாக சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரையும் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை கடற்படையினர் படகுடன் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 20 பேரும் மாலை 6 மணியளவில் இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்த மீனவர்கள் 20 பேரையும் சக மீனவர்களும், மீனவர்களின் உறவினர்களும் வரவேற்றனர். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கும்போது பாரம்பரிய இடத்தில் மின் பிடித்ததாகவும், இலங்கை கடற்படை தங்களை கைது செய்து இரணைதீவு பகுதியில் வைத்திருந்ததாகவும் இன்று பிற்பகல் அனைவரையும் விடுவிப்பதாக தெரிவித்து படகுடன் தங்களை விடுவித்ததாக தெரிவித்தனர். சிறை பிடிக்கப்பட்ட நிலையில் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் செய்ததாகவும் மேலும் விடுவிப்பதற்காக நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கும் இலங்கை அரசுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

Updated On: 26 March 2021 5:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு