Begin typing your search above and press return to search.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நிறுத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவிப்பு
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நிறுத்தி வைப்பதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் 79 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பதவிகள் நிரப்பிட பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 20.04.2022 முதல் 30.04.2022 (24.04.2022 ஞாயிறு நீங்கலாக) முடிய உள்ள காலதத்திற்குள் நேர்காணலை அரசு நியமன விதிமுறைகளின்படி தேர்வு செய்ய நேர்காணல் 20.04.2022 முதல் 27.04.2022 முடிய நடைபெற்று வந்தது. அனைத்து நடவடிக்கைகளையும், நிர்வாக காரணங்களால் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் உடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.