/* */

குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்திய திமுக எம்பி அப்துல்லா

புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்திய திமுக எம்பி அப்துல்லா
X

புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் வழங்கி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மாநிலங்களவை எம்பி அப்துல்லா.

புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் வழங்கி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மாநிலங்களவை எம்பி அப்துல்லா.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அக்னி நட்சத்திரம் வெயில் துவங்கி விட்டதால் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர்பந்தல் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி புதுக்கோட்டையில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலில் தர்பூசணியை நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பல்வேறு வகையான நீராகாரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை பால் பண்ணை ரவுண்டானா அருகே உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை எம்பி அப்துல்லா கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வெயிலின் தாக்கத்த தணித்துக்கொள்ள உதவும் வகையில் குச்சி ஐஸ் வழங்கினார்..

குச்சி ஐஸ்சை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஒன்றுக்கு இரண்டு ஐஸ்களை வாங்கிச் சென்றனர். கோடைகால தண்ணீர் பந்தலில் நீர்மோர் சர்பத் தர்ப்பூசணி பழங்கள் வழங்கி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு குச்சி ஐஸ்வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பேருந்தில் சென்ற பொதுமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் குச்சி ஐஸ் இலவசமாக வழங்கியது பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு பேருந்தில் சென்றனர்.

இந்த நிகழ்வில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை. தமிழ்ராஜா, புதுக்கோட்டை மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஆலயம் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்

Updated On: 7 May 2022 8:44 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!