Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தில், டிராக்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
பெரம்பலூரில் இருந்து உடும்பியம் தனியார் சர்க்கரை ஆலைக்கு, அரவைக்காக கரும்பை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த பெரியம்மாபாளையத்தை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபரின் இரு சக்கர வாகனத்தில் டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து, காவல் நிலையத்திற்கும் அவசர ஊர்திக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து விபத்து நிகழ்ந்த பகுதிக்கு சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.