Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சந்திரசேகர். இவர் தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் அலாவுதின் மற்றும் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் லாடபுரம் கிராமத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அவர் சட்ட விரோதமாக 1240 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையொட்டி சந்திரசேகரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.