Begin typing your search above and press return to search.
குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரம்பலூர் போலீசார்
குற்ற தடுப்பு குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் அரும்பாவூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அறிவுரையின்படி அரும்பாவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குமார் மற்றும் சாவித்திரி ஆகியோர்கள், பெரம்பலூர் மாவட்டம் வேப்ந்தட்டை கிராமத்தில் பொது மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குற்ற தடுப்பு குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.