நாமக்கல் அருகே விவசாய கிணற்றில் இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு

நாமக்கல் அருகே விவசாய கிணற்றில்    இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு
X

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பட்டி அருகே தனியார் விவசாய கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த புள்ளி மான்.

நாமக்கல் அருகே தனியார் விவசாய கிணற்றில், இறந்த நிலையில் புள்ளி மான் மீட்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் அருகே தனியார் விவசாய கிணற்றில், இறந்த நிலையில் புள்ளி மான் மீட்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அடுத்த ஆலாம்பட்டி பகுதியில் உள்ள, தனியார் விவசாய கிணற்றில், புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்தது. இது குறித்து, அப்பகுதி மக்கள், நாமக்கல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அங்கு சென்ற்ற வனத்துறையினர் கிணற்றில் இறந்து மிதந்த புள்ளிமானை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரூர், ஆண்டாபுரம், ஆலாம்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவு மான்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவு நேரத்தில் தண்ணீர் தேடியோ அல்லது வழித்தவறியோ வந்த புள்ளிமான், கிணற்றில் விழுந்து இறந்ததா, அல்லது தெருநாய்கள் விரட்டியபோது, தப்பி வந்த மான், கிணற்றில் விழுந்து இறந்ததா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
நாளை தமிழகம் முழுவதும் மின்தடை - உங்கள் பகுதி பாதிக்கப்படுகிறதா என்பதை அறியுங்கள்!