நாகப்பட்டினம் நம்பியார் நகரில் 8 மாவட்ட மீனவர்கள் கூட்டம்
சுருக்குமடி வலைக்கு ஆதரவு தெரிவித்து நாகை நம்பியார் நகரில் 8 மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவாக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி வானகிரி- திருமுல்லைவாசல் மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடலோர மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
தொடர்ந்து சுருக்குமடி வலைக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு ஆதரவு தெரிவித்து நாகை நம்பியார் நகரில் திருவள்ளுவர்,பாண்டி, கடலூர் மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம் உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் உள்ள சுருக்கு மடி வலை ஆதரவு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் சுருக்கு மடி வலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு மீனவர்களை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.