/* */

நாகை: இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்

நாகை அரசு மருத்துவனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசு வழங்கி மிலாடி நபி பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

நாகை: இன்று பிறந்த  குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்
X
மிலாடி நபி விழாவையொட்டி நாகை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு  இஸ்லாமியர்கள் பரிசு வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மிலாடி நபி பண்டிகை பேரணிகள் செல்ல கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மிலாடி நபியான இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மிலாடி நபி பண்டிகையை கொண்டாடும் வகையில் முதலாவது பிறந்த வேதாரண்யம் அடுத்துள்ள அண்டகத்துரை கிராமத்தை சேர்ந்த மேகலா - செந்தமிழ் செல்வன் தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க காசையும், அடுத்தடுத்து பிறந்த 25 குழந்தைகளுக்கு கொசுவலை உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் பரிசாக வழங்கி இஸ்லாமியர்கள் மிலாடி நபி பண்டிகையை கொண்டாடினர்.


Updated On: 19 Oct 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...