மதுரை அருகே பைக் மீது லாரி மோதி இளைஞர் பலி
பைல் படம்
சென்னையில் இருந்து மதுரைக்கு பைக்கில் சென்ற வாலிபர் கண்டெய்னர் லாரி மோதி உயிரிழந்தார்.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் அம்பேத்கர் காலனி முதலாவது தெருவை சேர்ந்தவர் சுப்பையா( 70)இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி மாரியம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் சுப்பையாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் காதலன் வைத்தீஸ்வரன் இரவு நேர பயணத்தை தவிர்க்க கூறி தனது நண்பர் வீட்டில் தங்கும்படி கேட்டுக்கொண்டார் .இவரது பேச்சை நம்பிய அந்த இளம் பெண் வைத்தீஸ்வரனின் நண்பர் கோவிந்தராஜ் என்பவரின் உலக நேரியில் உள்ள வீட்டில் தங்கவைத்தார்.
நள்ளிரவில் அங்கு சென்ற காதலன் வைத்தீஸ்வரன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதைத்தொடர்ந்து காதலனும் அவரது குடும்பத்தினரும் அவரது நண்பரும் அந்தப்பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்தப்பெண் தல்லாகுளம் அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்தார். போலீசார், காதலன் வைத்தீஸ்வரன், அவருடைய அம்மா லதா, சகோதரி சித்ராதேவி, நண்பர் கோவிந்தராஜ் இவர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து காதலன் வைத்தீஸ்வரனை கைது செய்தனர்.
முன்விரோதத்தில் வாலிபரை தாக்கி செல்போனை உடைத்த இரண்டு பேர் கைது .
மதுரை கீரைத்துரை லாடப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் துரைமுருகன்(26.). இருவருக்கும் அண்ணாநகர் எல்ஐசி காலனியை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் அரவிந்தகுமார்(20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் அரவிந்த்குமாரும் குமாரும் அவருடைய நண்பர் அவனியாபுரம் எம்எம்சி காலனி கண்ணன் மகன் பிரவீன்(23 ) இருவரும் ஆபாசமாக பேசி தாக்கி துரைமுருகன் வைத்திருந்த செல்போனையும் பறித்து உடைத்தனர். இந்த சம்பவம் குறித்து துரைமுருகன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தாக்கிய அரவிந்த் குமார், பிரவீன் இருவரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu