/* */

கீழ்குப்பம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை

கீழ்குப்பம் அருகே குடும்ப பிரச்சனையில் கணவன் மனைவி இரண்டு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கீழ்குப்பம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி சாந்தாமணி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், முதல் மகனுக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு கீழ்குப்பம் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள சமாதியின் மேல் தென்னை மர வேருக்கு வைக்கும் மருந்தை குடித்து கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து இன்று காலை வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!