/* */

கரூரில் தடுப்பூசி விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூரில், கொரோனா தடுப்பூசி விலையேற்றத்தைக் கண்டித்து சாமானிய மக்கள் நல கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

கரூரில் தடுப்பூசி விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு சாமானிய மக்கள் நல கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் குணசேகரன் பேசினார். அப்போது அவர் மத்திய அரசு பெருந்தொற்று காலத்தில் கொரோனா தடுப்பூசி விலையை கடுமையாக உயர்த்தியுள்ளதைக் கண்டித்து விளக்கி கூறினார்.

தடுப்பு ஊசி மருந்தின் விலையை உயர்த்தி, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர். மக்களின் உயிரை காப்பாற்ற, அனைவருக்கும் பொது சுகாதார துறையின் கீழ் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 27 April 2021 8:00 AM GMT

Related News