/* */

நிஜ காட்சியை மிஞ்சிய போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நிஜ காட்சியை மிஞ்சிய போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்களை கவர்ந்தது.

HIGHLIGHTS

நிஜ காட்சியை மிஞ்சிய போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை
X

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தால் போலீசார் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சி நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தால் எத்தகைய சூழ்நிலை நிலவும் என்பதை ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

குண்டு வெடிப்பில் சிக்கி சிலர் ரத்தக் காயத்துடன் உடல் சிதறி கிடப்பது போன்றும், உயிருக்கு போராடும் சிலரை போலீசார் மீட்பது போன்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது போன்றும் போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். நிஜ காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு போலீசார் காட்டிய ஒத்திகை நிகழ்ச்சி அங்கு கூடி நின்ற பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

Updated On: 17 Jun 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?