/* */

செல்ஃபி ஸ்டாண்ட் வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

செல்ஃபி ஸ்டாண்ட் வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
X

காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் பட்டு நிறுவனம் சார்பில் கட்டாயம் நான் வாக்களிப்பேன் என செல்ஃபி வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் வரும் தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம் என பலவகைகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது.அவ்வகையில் தனியார் அமைப்புகளும் தங்கள் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டுச்சேலை உற்பத்தி மற்றும் விற்பனையகம் வாசலில் 100 சதவீதம் வாக்களிப்போம் , எனது வாக்கு எனது உரிமை என்ற வாசகத்துடன் கூடிய செல்ஃபி ஸ்டேண்ட் வைத்துள்ளனர். இளைஞர்கள் ‌, புதிய வாக்காளர்கள் என பலர் அதில் புகைப்பட பதிவு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுவது வரவேற்கத்தக்கது.

Updated On: 2 April 2021 11:15 AM GMT

Related News