/* */

வ.உ.சி புகழ் பரப்பும் புகைப்பட கண்காட்சி வாகனம் துவக்கிவைப்பு

வ.உ.சி. தியாகத்தை பறைசாற்றும் நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தை, காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

வ.உ.சி புகழ் பரப்பும் புகைப்பட கண்காட்சி வாகனம் துவக்கிவைப்பு
X

வ.உ.சி. குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தை,  காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றில் பொதிந்து கிடக்கும் அரிய நிகழ்வுகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டுப் பயன்பெறும் நோக்கில், போக்குவரத்துத் துறையின் உதவியோடு, நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்து அமைக்கப்பட்டுள்ளது. இதனை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறும்படங்களும் திரையிடப்படவுள்ளது. இன்று முதல் சனிக்கிழமை வரை ஆறு நாட்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 21 பள்ளிகளில் இயக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 21 Dec 2021 11:30 AM GMT

Related News