Begin typing your search above and press return to search.
திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மருள் நீக்கியார் குழு உழவார பணி
சென்னையை சேர்ந்த மருள்நீக்கியார் உழவாரப்பணி குழுவினர் 100 பேர் திருக்கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் முள் நீக்கியார் உழவார திருப்பணி குழு கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்குழுவிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரதி மாதம் மூன்றாம் வாரத்தில் ஏதாவது ஒரு துறையில் உழவாரப் பணி மேற்கொண்டு கோவில்களை சுத்தம் செய்வது அங்கு இருக்கும் செடி மற்றும் குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் உள்ள திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலை தேர்தெடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட உழவார பணிக்குழுவினர் கோயில்களில் பணிகளை மேற்கொண்டனர்.
உழவாரப் பணிகளை மேற்கொண்ட பின் சிவ மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜை மேற்கொண்டு திருப்பணியை நிறைவு செய்தனர்.