/* */

காஞ்சிபுரம் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

திம்மசமுத்திரம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு அருகே புள்ளி மான் நீர் அருந்த வந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
X

நாய் கடித்து இறந்த புள்ளி மான். 

காஞ்சிபுரம் அருகே உள்ள பொன்னேரி கரை பகுதியில் உள்ள திம்மசமுத்திரம் ஊராட்சி பகுதியில் கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதி 2 குடியிருப்பு உள்ளது.

அக்குடியிருப்பை ஒட்டி காடு போல மரம் முட்செடிகள் வளர்ந்து உள்ளது. இப்பகுதியில் புள்ளிமான்கள், காட்டுப்பன்றி, முயல், கீரி பிள்ளை உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன். அந்த பகுதியில் தண்ணீர் தொட்டி இருப்பதால் தண்ணி குடிக்க புள்ளிமான்கள் வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் ஒன்றை நாய் கடித்து உள்ளது. இதுகுறித்து குடிசை மாற்று வாரிய பொறுப்பாளர் ஜஸ்டின் ராஜ் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் , திம்மசமுத்திரம் வருவாய் அலுவலர் பத்மாவதி, வன அலுவலர் ராமதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த புள்ளிமான் எங்கிருந்து வருகிறது? யாராவது நாயை விட்டு கடிக்க விட்டார்களா? அல்லது நாய் கடித்து தான் இறந்ததாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பினனர் புள்ளிமானை வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Jun 2022 1:30 PM GMT

Related News