Begin typing your search above and press return to search.
'ஓட்டு போட கத்துக்க வாங்க' கலெக்டர் மகேஸ்வரி
இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குபதிவு நடந்தது.
HIGHLIGHTS
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம்தேதி நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்து இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு " ஓட்டு போட கத்துக்க வாங்க " என கலெக்டர் மகேஸ்வரி அழைத்து வாக்களிக்கும் நடைமுறைகளை கற்று கொடுத்து வாக்களிக்க வைத்தார்.
இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா , மகளிர் திட்ட இயக்குனர் சீனுவாசராவ் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் , இளம் தலைமுறையினர் என பலர் கலந்து கொண்டனர்.