/* */

மக்களுக்காக குரல் கொடுப்பது மார்க்சிஸ்ட்: சௌந்தர்ராஜன் பிரசாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சௌந்தரராஜன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

மக்களுக்காக குரல் கொடுப்பது மார்க்சிஸ்ட்: சௌந்தர்ராஜன் பிரசாரம்
X

காஞ்சிபுரம் கீழ் கேட் பகுதியில், 35வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிரிஜாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மத்தியகுழு உறுப்பினர் சௌந்தரராஜன்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 35 வது வார்டு பகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் கிரிஜாவை ஆதரித்து, அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் உறுப்பினரும் ஏ.சவுந்தராஜன் இன்று, 3 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவ்வகையில், 35வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர், கீழ்பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சௌந்தரராஜன் பேசியதாவது: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல், நெசவாளர்கள் பிரச்சனை உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தீர்வு காணப்படும். கம்யூனிஸ்ட் வேட்பாளரிடம் பணம் இல்லை; ஆனால் மாமன்றத்தில் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கூக்குரலிட தைரியம் உள்ளது.

ஜாதி, பணம் இவற்றை எல்லாம் புறந்தள்ளி மக்கள் தங்களுக்கு அரிவாள் சுத்தி நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பதவியில் இல்லாதபோதே பொதுமக்களுக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி, பிரச்சினைகளுக்கான தீர்வினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்படுத்தி தந்தது. எனவே தேர்தலில் ஆதரியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின் பிள்ளையார்பாளையம், ஒளிமுகமதுபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் காஞ்சிபுரம் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Feb 2022 6:45 AM GMT

Related News