/* */

மின்வாரிய ஊழியர்களின் வாரிசுகள் 5 பேருக்கு பணி‌ ஆணை: எம்எல்ஏ வழங்கல்

காஞ்சிபுரத்தில் மின்வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்.

HIGHLIGHTS

மின்வாரிய ஊழியர்களின் வாரிசுகள் 5 பேருக்கு பணி‌ ஆணை: எம்எல்ஏ வழங்கல்
X

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசனிடமிருந்து பணி ஆணையை பயணாளிகள்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் கடந்த பணிக்காலத்தில் நான்கு வாரிய பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் கருணை பணி இடங்களை நியமனம் செய்ய தலைமை அலுவலகம் உத்தரவின் பேரில், நான்கு பேருக்கு பணி ஆணைகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேற்பார்வை பொறியாளர்/காஞ்சிபுரம் செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்/நகரம்/காஞ்சிபுரம் ஆகியோர் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Oct 2021 8:45 AM GMT

Related News